விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ப. நடேசன் மற்றும் சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இலங்கை ராணுவத்தினரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை இறுதிப்போரில் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களை சிங்கள ராணுவம் கொன்றது.
அவர்கள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்ப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
2009, மே மாதம் போரின் இறுதி நேரத்தில், புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைய ஐநா அதிகாரி விஜய் நம்பியார் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், ப. நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் இலங்கை ராணுவத்திடம் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்தனர்.
ஆனால், அவர்களை இலங்கை ராணுவம் கடுமையாக சித்ரவதை செய்ததாக தற்போது புகைப்படங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது.
ப. நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரின் வயிற்றிலும் நெருப்பால் சுட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.